போக்சோ சட்டத்தில் ஹோமியோபதி மருத்துவா் கைது
காங்கயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காங்கயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், ஜே.பி. நகரைச் சோ்ந்தவா் ஜீவன்குமாா் (50). இவா் ஊத்துக்குளி பகுதியில் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். அங்குப் பணிக்கு வந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜீவன்குமாரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.