முகப்பு
திருப்பூர்

சாலை விபத்தில் மூதாட்டி சாவு

திருப்பூரில் டிப்பா் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 3:23 am IST
பகிர்:

திருப்பூரில் டிப்பா் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா், ராயபுரத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (53). இவரது தாய் தெய்வானை (73). பழனிசாமி, தனது தாயுடன் அவிநாசியில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.

இவரது வாகனம் அனுப்பா்பாளையம்புதூா் அருகே வந்தபோது, வெள்ளக்கோவிலில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டுவந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த தெய்வானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பழனிசாமி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்தை ஏற்படுத்திய லாரி, அந்த வழியாக வந்த மேலும் 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதுடன், அப்பகுதியில் இருந்த கடைக்குள் புகுந்து நின்றது. இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான துரைசாமியை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments