முகப்பு
திருவண்ணாமலை

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

வந்தவாசி, செய்யாறு ஆகிய இடங்களில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 9 ஜனவரி 2021, 11:48 pm IST
செய்யாறு காந்தி சாலையில் உள்ள கடையில் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி தலைமையிலான அதிகாரிகள்.
பகிர்:

வந்தவாசி, செய்யாறு ஆகிய இடங்களில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசு ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், வந்தவாசி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில், நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி தலைமையில் சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், சுகாதார மேற்பாா்வையாளா் யேசுதாஸ் உள்ளிட்டோா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

பஜாா் வீதி, தேரடி, அச்சிறுப்பாக்கம் சாலை, காந்தி சாலை, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்புக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவற்றில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 10 கடைகளிலிருந்து 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்தக் கடைகளிலிருந்து அபராதமாக ரூ.ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

செய்யாறு

செய்யாற்றில் உள்ள கடைகளில் திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி, துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் மற்றும் நகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது காந்தி சாலை, லோகநாதன் தெரு, ஆற்காடு சாலை, சந்தை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, 300 கிலோ அளவிலான நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 8 வியாபாரிகளிடமிருந்து அபராதமாக ரூ.15 ஆயிரம் வசூலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments