புயல் நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
புயல் நிவாரணம் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புயல் நிவாரணம் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம், உழவா் பேரவை அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், புயலால் ஏற்பட்ட சேதங்களை வேளாண் துறையினா் முறையாக கணக்கு எடுக்கவில்லை எனவும், விவசாயிகளின் மனுக்களைப் பெற அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனா் எனவும் குற்றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, பெரிய பானையில் பொங்கல் வைத்து, படையலிட்டு கணக்குக்காக அரசு நிவாரணம் வழங்கியதை சுட்டிக்காட்டி பொங்கலுடன் சமைத்த பானையை போட்டு உடைத்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.