ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!
மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், அக்டோபர் மாதம் அதன் மொத்த விற்பனை 13% உயர்ந்து 124,951 ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், அக்டோபர் மாதம் அதன் மொத்த விற்பனை 13% உயர்ந்து 1,24,951 வாகனங்களாக உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 1,10,574 ஆக இருந்தது.
2024 அக்டோபரில், உள்நாட்டு விற்பனை 1,01,886 ஆக இருந்த நிலையில், தற்போது 1,16,844 ஆக உயர்ந்துள்ளது. இது 15% உயர்வு என்றது ராயல் என்ஃபீல்ட்.
இருப்பினும், ஏற்றுமதி கடந்த ஆண்டு இதே காலத்தில் 8,688 வாகனங்களிலிருந்து 7% குறைந்து 8,107 வாகனங்களாக உள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான ராயல் என்ஃபீல்ட் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
பண்டிகை உற்சாகம் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றதாக ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநரும் ராயல் என்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி. கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையான பண்டிகை மாதங்களில் இதுவரைக்கும் 2.49 லட்சத்திற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி, எங்கள் உத்வேகத்தையும், பிராண்டின் மீது ரைடர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பையும் பறைசாற்றும் ஒரு மைல்கல்லை நாங்கள் அடைந்துள்ளோம் என்றார்.
இதையும் படிக்கவும்: என்எல்சி நிகர லாபம் ரூ.1,564 கோடி!
Motorcycle maker Royal Enfield on Sunday reported a 13 per cent rise in total sales at 1,24,951 units in October as compared to 1,10,574 units in the same month last year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.