முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 11:53 AM
பங்குச்சந்தை - IANS
பகிர்:

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப். 27) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,856.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 281.78 உயர்ந்து 76,945.99 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103.25
புள்ளிகள் உயர்ந்து 24,001.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.16 சதவீதம், 1.05 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் ஆக்சிஸ் வங்கி பங்கு மட்டும் சரிந்து மற்ற அனைத்து பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியல் எஸ்டேட், ஐடி,பார்மா உள்ளிட்ட பெரும்பாலான துறைகள் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் நிதி சேவைகள், தனியார் வங்கிகள் குறியீடுகள் சரிந்து வருகின்றன.

summary

Stock Market: Sensex pares 300 pts from day high; Nifty tests 24,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.