டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.87ஆக நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.87ஆக நிறைவடைந்தது.
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தலையீடு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.87ஆக நிறைவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் டாலருக்கு நிகரான ரூ.90.20 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ.89.75 முதல் ரூ.90.23 என்ற வரம்பில் வர்த்தகமாகி, முடிவில், முந்தைய நாள் முடிவை விட 31 காசுகள் உயர்ந்து ரூ.89.87 ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு தனது நான்கு நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, டாலருக்கு நிகராக 12 காசுகள் உயர்ந்து ரூ.90.18 என்ற அளவில் நிலைபெற்றது.
Advertisement
Advertisement
The rupee rose 31 paise to close at 89.87 against the US dollar on possible intervention by the RBI and a fall in global crude oil prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.