ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.53! 5 காசுகள் உயர்வு!
இன்றைய வர்த்தகத்தில், தொடர்ந்து 3வது நாளாக ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 94.53 ஆக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியப் பதற்றம் தணிந்ததால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து 3வது நாளாக 5 காசுகள் உயர்ந்து ரூ. 94.53 ஆக நிலைபெற்றது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தணிந்ததாக தகவல்கள் வெளியானதும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்பாடுகளும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான உடனடி அச்சுறுத்தலைக் கணிசமாகக் குறைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 94.69 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ. 94.48 முதல் ரூ. 94.71 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிலையை விட 5 காசுகள் உயர்ந்து ரூ. 94.53 என்ற அளவில் நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 காசுகள் உயர்ந்து ரூ. 94.58 ஆக இருந்தது. கடந்த மூன்று நாள் வர்த்தக அமர்வுகளில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 132 காசுகள் உயர்ந்துள்ளது.