ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.95.27! 14 காசுகள் உயர்வு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 95.27 ஆக நிலைபெற்றது.
மும்பை: அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இந்திய ரூபாய் மதிப்பிழப்பைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியில், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 95.27 ஆக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு ஆகியவை அவற்றின் உச்ச நிலையிலிருந்து குறைந்ததால், ரூபாய் தனது ஆரம்பக்கட்ட சரிவிலிருந்து மீண்டு பிறகு உயர்ந்து நிறைவடைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.52 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ. 95.07 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 95.56 வரையிலும் சென்றது. இறுதியில், முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ. 95.27 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ. 95.41 ஆக நிறைவடைந்தது.
The rupee appreciated 14 paise to close at 95.27 against the US dollar on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.