முகப்பு
வணிகம்

7,000mAh பேட்டரி திறன், குறைந்த விலை! மோட்டோ ஜி77 பவர் இந்தியாவில் அறிமுகமானது!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமானது.

Updated On : 8 ஜூலை 2026, 7:12 pm IST
மோட்டோ ஜி77 பவர் - dinmani online
பகிர்:

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமானது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

பேட்டரி திறன்:

Advertisement

Advertisement

59 மணிநேரம் வரை நீடிக்கும் பிரம்மாண்டமான 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

திரை:

  • 6.72-அங்குல ஃபுல் HD+ (2400 x 1080) LCD பேனல்.

  • மென்மையான 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,050 நிட்ஸ் மூலம் அதிக பிரகாசமான திரையை வழங்குகிறது.

  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன், ஈரக் கைகளால் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் வாட்டர் டச் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

செயல்திறன் & சேமிப்புத்திறன்

  • மீடியாடெக் டைமென்சிட்டி 6400 (6nm) ப்ராசசர் மூலம் இயங்குகிறது.

  • 8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.

கேமராக்கள்:

  • பின்பக்க கேமரா: 50 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா, 8MP மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • முன்புற கேமரா: 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

மென்பொருள்:

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 17 அப்டேட் வரை வழங்குகிறது.

விலை:

மோட்டோ ஜி77 ஸ்மார்ட்போன் அறிமுக விலையாக ரூ. 23,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் விற்பனை விலையாக ரூ. 25,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு, நீலம், பச்சை, கிரே போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

இன்று வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 14 முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

summary

Motorola's Moto G77 Power smartphone was launched in India today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments