நிலையாக வர்த்தகமாகும் பங்குச்சந்தை! வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் இன்று (ஜூன் 5) நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,629.94 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 64.66 புள்ளிகள் குறைந்து 74,295.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.50 புள்ளிகள் குறைந்து 23,384.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்ட முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து நிஃப்டி பொதுத்துறை வங்கி, நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. அதே நேரத்தில், நிஃப்டி மெட்டல், ஐடி, எஃப்எம்சிஜி ஆகியவை சரிந்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், எம்&எம், எட்டர்னல், சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் இதர நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.74 ஆக வர்த்தகம் தொடங்கியது