முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

பங்குச்சந்தை.. - IANS
பகிர்:

நேற்றைத் தொடர்ந்து இன்றும்(செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,688.39 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 801 புள்ளிகள் குறைந்து 75,231.87 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 212.25 புள்ளிகள் குறைந்து 23,603.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், எம்&எம், டாடா ஸ்டீல், எட்டர்னல், என்டிபிசி, ரிலையன்ஸ், சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் இதர நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.77 சதவீதம், 1.06 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக, நிஃப்டி ஐடி குறியீடு அதிக சரிவைச் சந்தித்தது. தனியார் வங்கிகள், பார்மா, மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி ஆட்டோ, உலோகம், எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

கச்சா எண்ணெய் 0.76 சதவீதம் உயர்ந்து 105 டாலராக உள்ளது.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்து 95.51 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

summary

Stock Market: Sensex down 800 pts, Nifty tests 23,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.