முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

பங்குச்சந்தை - கோப்புப்படம்
பகிர்:

பங்குச்சந்தைகள் இன்று(மே 29, வெள்ளிக்கிழமை) கடும் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,988.51 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,092.05 புள்ளிகள் குறைந்து 74,775.74 புள்ளிகளில் நிலைப் பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 359.40 புள்ளிகள் குறைந்து 23,547.75 புள்ளிகளில் நிலைப் பெற்றது.

Advertisement

Advertisement

தொடர்ந்து 3 ஆவது நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. முதலீட்டாளர்களுக்கு இன்று மட்டும் ரூ. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர் கிரிட், என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் அதிக நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் போன்ற ஐடி நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாயின.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.33 சதவீதம், 0.85 சதவீதம் சரிந்தன.

துறை வாரியாக, நிஃப்டி உலோகம், எண்ணெய் & எரிவாயு பங்குகள் 2% வரை சரிந்தன.

வர்த்தக நேர முடிவில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 92 டாலராக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.05 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

stock market: Investors lose Rs 6 lakh crore as Sensex drops over 1,000 points

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.