பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
நேற்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,339.24 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 108.74 புள்ளிகள் குறைந்து 77,849.78 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.85 புள்ளிகள் குறைந்து 24,327.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் 30 பங்குகளில் எம்&எம், ஐசிஐசிஐ வங்கி, எட்டர்னல், ட்ரெண்ட், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, எல்&டி உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் பெல், என்டிபிசி, டிசிஎஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.36 சதவீதம், 0.37 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி எப்எம்சிஜி குறியீடு அதிக சரிவைச் சந்தித்தது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல் எஸ்டேட் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி ஆட்டோ பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
கச்சா எண்ணெய் 0.63 சதவீதம் உயர்ந்து 101.91 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.74 ஆக உள்ளது.
Stock Market: Sensex falls 150 pts, Nifty tests 24300
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.