இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாவது பற்றி...
வாரத்தின் கடைசி நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடங்கியவுடன் 685 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
காலை 9.35 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 774.55 புள்ளிகள் சரிந்து 76,635 ஆகவும், நிஃப்டி 212.80 புள்ளிகள் சரிந்து 23,955 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
Advertisement
Advertisement
சென்செக்ஸில் என்டிபிசி, பாரதி ஏர்டெல், டிரெண்ட், சன்பார்மா, ரிலையன்ஸ், பவர்கிரிட், டைட்டன், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி 50 பங்குகளில் என்டிபிசி, அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், டைட்டன், ரிலையன்ஸ், சன் பார்மா, எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
துறைவாரியாக நிஃப்டி பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவுடனும், பார்மா, எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் உயர்வுடனும் வர்த்தகமாகி வருகின்றன.
Jun 19, 9.35 AM : Indian stock market opens lower!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.