முகப்பு
வணிகம்

மகிந்திரா பிஇ 7: புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி 2027ல் அறிமுகம்!

மகிந்திரா பிஇ7 இந்தியச் சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுவது பற்றி..

Updated On : 6 மார்ச் 2026, 5:16 pm IST
பகிர்:

கார் விற்பனையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் மகிந்திரா நிறுவனம், தனது அடுத்த எலெக்ரிக் காரான பிஇ 7 மாடலை 2027-ல் சந்தைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிஇ07 என்ற மின்சார வாகனத்தை மகிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. அதே மாடல் 2027-ல் உற்பத்தி பதிப்பாக அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, 2026ல் மகிந்திரா நிறுவனம் பிஇ 6, எக்ஸ்.இ.வி. 9இ, எஸ்.இ.வி 9எஸ் ஆகிய எலெட்ரிக் மாடல்களை அறிமுகப்படுத்தியது.

Advertisement

Advertisement

அந்தவகையில், 2027-ல் அறிமுகமாகும் இந்த கார் நிறுவனத்தின் நான்காவது இவி காராகும். பிஇ வரிசையில் இரண்டாவது ஆகும்.

சிறப்பம்சங்கள் என்ன?

இந்த கார் சுமார் 4.6 மீட்டர் நீளத்துடன், 5 சீட்டர் வேரியண்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் உள்புறத்தில் 3 ஸ்கிரீன் டிஸ்ப்ளே 12.3 இன்ச். லெவல் 2 பிளஸ் ஆடாஸ், ஒடிஏ அப்டெட்ஸ் மற்றும் பனோரமிக் கிளஸ் ரூஃப் கொண்டது.

60 கிலோவாட் மணி முதல் 80 கிலோவாட் மணி திறன் கொண்ட பேட்டரி விருப்பங்கள் வழங்கப்படலாம்.

இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

எஸ்யுவி கார்களில் மகிந்திரா பிஇ 7 மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் 2027ல் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காத்திருப்போம்..

summary

Mahindra BE.07 EV began India road testing in March 2026, with a 2027 launch expected at ₹25 to ₹30 Lakh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments