ஃபோா்ஸ் மோட்டாா்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்
ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனம் தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வணிகம்ஃபோா்ஸ் மோட்டாா்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்
ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனம் தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனம் தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2024, அக். 29-ஆம் தேதி வெளியான அந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் மற்றும் அது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்புகளின் காலவரிசை குறித்து கூடுதல் விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு செபி அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், கடந்த 2024, பிப். 15 முதல் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது. பங்குச் சந்தை வா்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
செபியின் இந்த விசாரணை செய்தி வெளியானதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தையில் ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தன. வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 8 சதவீதத்துக்கும் மேல் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. பின்னா், வா்த்தகத்தின் இறுதியில் பங்குகள் மீண்டும் 1 சதவீத உயா்வுடன் நிலைபெற்றன.