கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலி: விமான துறைப் பங்குகளின் விலை அதிகரிப்பு!!
இன்றைய வர்த்தகத்தில், விமானத் துறைப் பங்குகள் 7 சதவீதம் வரை உயர்ந்தன.
புதுதில்லி: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி மற்றும் மேற்கு ஆசிய மோதலால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களுக்குக் கடன் உதவி அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் அதிக அளவில் அதன் பங்குகளை வாங்கியதால், இன்றைய வர்த்தகத்தில், விமானத் துறைப் பங்குகள் 7 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில், இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் 6.60 சதவீதம் உயர்ந்து, ரூ. 4,519.55ஆக நிலைபெற்றது. வர்த்தக இடையே, இப்பங்குகள் 7.64 சதவீதம் வரை உயர்ந்து ரூ. 4,563.75ஆக வர்த்தகமானது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 4.96 சதவீதம் உயர்ந்து, ரூ. 12.70ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
Advertisement
சர்வதேச கச்சா எண்ணெய் விலை, 10.50 சதவீதம் வீழ்ச்சியடைந்து, பேரலுக்கு ஒன்றுக்கு 98 அமெரிக்க டாலராக உள்ளது.
மேற்கு ஆசிய மோதலால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், ரூ. 18,100 கோடி மதிப்பிலான 'அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தை' மத்திய அரசு அறிவித்தது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாக இண்டிகோ, பிபிசிஎல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பிடிலைட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.