முகப்பு
வணிகம்

4-ஆம் காலாண்டு லாபம்- என்எஸ்இ: ரூ.2,871 கோடி; 8% வளா்ச்சி

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,871 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 7 மே 2026, 4:39 am IST
பகிர்:

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,871 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.2,650 கோடி லாபத்திலிருந்து இது 8 சதவீத வளா்ச்சியாகும். மதிப்பீட்டு காலாண்டில் மொத்த வருவாய் 22 சதவீதம் உயா்ந்து, ரூ.5,360 கோடியாக அதிகரித்துள்ளது.

2025-26 முழு நிதியாண்டில், என்எஸ்இ ஒட்டுமொத்தமாக ரூ.10,302 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் குறைவாகும்.

Advertisement

Advertisement

கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு வரி மற்றும் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக என்எஸ்இ ரூ.59,186 கோடி பங்களிப்பு வழங்கியுள்ளது. பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.35 இறுதி ஈவுத்தொகை வழங்கவும் வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதில் சிறப்பு ஒருமுறை ஈவுத்தொகையாக ரூ.10 அடங்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments