கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் எண்ணெய் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் உயர்வு!
கச்சா எண்ணெய் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வுடன் நிறவடைந்தன.
புதுதில்லி: கச்சா எண்ணெய் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வுடன் நிறவடைந்தன.
பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்த கச்சா எண்ணெய் விலை, கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் பெயிண்ட் உற்பத்தியாளர்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 6.89 சதவிகிதமும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 5.12 சதவிகிதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு 4.22 சதவிகிதமும் உயர்ந்தன.
Advertisement
பெயிண்ட் உற்பத்தி நிறுவனங்களான இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.77 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.56 சதவிகிதமும், ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.33 சதவிகிதமும், பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.67 சதவிகிதமும் உயர்ந்தன.