முகப்பு
வணிகம்

ரூ. 30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 8 மே 2026, 11:13 pm IST
கச்சா எண்ணெய் - பிரதிப் படம்
பகிர்:

இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலால் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் அவ்வழியே கச்சா எண்ணெய் உள்பட எரிபொருள் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் பயணிப்பது தடைபட்டது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்தது.

ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தப்படவில்லை. மாறாக இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத பெட்ரோலிய நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிா்க்க பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.

Advertisement

Advertisement

இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விலையை மத்திய அரசு அதிகரிக்கவில்லை. இதனால் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்காவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.62,500 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கியபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 அமெரிக்க டாலா்களாக இருந்த நிலையில், தற்போது அது 144 அமெரிக்க டாலா்களாக உயா்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments