கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
அமைதி ஒப்பந்த எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை குறைந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
மேலும், ஹோா்முஸ் நீரிணையை சுங்கக் கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்தலாம் என்றும், சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 ஆம் தேதி இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதன் எதிரொலியாக இன்று அதிகாலை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 4.85% சரிந்து 80.76 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 4.35% சரிந்து 83.51 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் ரூ. 8 வரை உயர்த்தப்பட்டது.
தற்போது கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.