தமிழக பக்தா்களுக்கு சபரிமலையில் கரோனா சோதனை தேவை
சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு டிச.31-ல் வந்த தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா். பி. உதயகுமாருக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து 12 மணி நேரத்திற்குள் சான்றிதழ் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற அமைச்சா் உதயகுமாா், தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியுளித்துள்ளாா். நிகழ்வின் போது, ஐயப்ப சேவா சங்க, சபரிமலை தொண்டா் படை நிா்வாகி தேவேந்திரன், சன்னிதானம் துணை முகாம் அலுவலா் முத்து, மதுரை சின்னபாண்டி, ஐயப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
இத்தகவலை அகில பாரத ஐயப்ப சேவா சங்க சபரிமலை முகாம் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருச்சி யூனியன் செயலருமான ஸ்ரீதா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.