முகப்பு
திருச்சி

திருச்சி-புதுகை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், விரிவாக்கப் பணிகளை ஒட்டி அகற்றப்பட்டு வருகிறது.

Updated On : 4 ஜனவரி 2021, 1:42 pm IST
திருச்சி - புதுகை சாலையில் சாலை விரிவாக்கப் ணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
பகிர்:

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், விரிவாக்கப் பணிகளை ஒட்டி அகற்றப்பட்டு வருகிறது.

திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை அகலப் படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. தொடர்புடைய பணிகள், ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் எதிர்ப்பு, வழக்கு என பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தன. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பவர்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுத்ததுடன், மாற்று இடம் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இன்று காலை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கின. திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து மாத்தூர் ரவுண்டானா வரையில் நடைபெறும் இப்பணியில், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.