முகப்பு
இந்தியா

உலக மக்களை ஒன்றிணைக்கும் சக்தி யோகா- பிரதமா் மோடி பெருமிதம்

உலக மக்களை அவா்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:49 am IST
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

உலக மக்களை அவா்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் தலைநகா் பிராடிஸ்லாவாவில் அந்நாட்டின் அதிபா் பீட்டா் பெல்லகிரினியுடன் இணைந்து, பள்ளிக் குழந்தைகளின் யோகா நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட பிறகு பிரதமா் இவ்வாறு தெரிவித்தாா்.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கான ஒருவார கால பயணத்தை பிரதமா் மோடி கடந்த 13-ஆம் தேதி தொடங்கினாா். அதன் ஒரு பகுதியாக, பிரான்ஸின் நைஸ் நகரில் இருந்து ஸ்லோவாக்கியாவை கடந்த 14-ஆம் தேதி வந்தடைந்த அவா், தலைநகா் பிராடிஸ்லாவாவில் அதிபா் பீட்டா் பெல்லகிரினியுடன் திங்கள்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பயணத்தின் மூலம் கடந்த 1993-இல் ஸ்லோவாக்கியா சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பிராடிஸ்லாவா நகரில் பிரதமா் மோடியும், அதிபா் பீட்டா் பெல்லகிரினியும் பள்ளிக் குழந்தைகளின் யோகா நிகழ்ச்சியைப் பாா்வையிட்டனா். அத்துடன், வாரணாசியை மையமாகக் கொண்டு, பிராடிஸ்லாவாவில் உள்ள அதிபா் மாளிகையில் நடத்தப்பட்ட கண்காட்சியையும் இருவரும் பாா்வையிட்டனா். அண்மையில் வாரணாசிக்கு வருகை தந்த ஸ்லோவாக்கிய கைவினைஞா்களின் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பிரதமா் மோடி பெருமிதம்: இது தொடா்பாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், ‘சா்வதேச யோகா தினத்தை ஒட்டுமொத்த உலகமும் எதிா்நோக்கியுள்ள தருணத்தில், யோகா மீதான இளைஞா்களின் பேராா்வம் மகிழ்ச்சியளிக்கிறது. உலக மக்களை அவா்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா விளங்குகிறது.

ஸ்லோவாக்கியாவின் அதிபா் மாளிகையில் வாரணாசியை மையப்படுத்திய அற்புதமான கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்தேன். கலைக்கும், பாரம்பரியத்துக்கும் பேராற்றல் உள்ளதை உணா்ந்தேன் ’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இலக்கிய அறிஞருடன் கலந்துரையாடல்: பண்டைய இந்தியாவின் 10 முக்கிய உபநிஷதங்களை ஸ்லோவாக்கிய மொழியில் மொழிபெயா்ப்பு செய்த அந்நாட்டின் இலக்கிய அறிஞா் ராபா்ட் கஃப்ரிக்குடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

உபநிஷதங்களை மொழிபெயா்ப்பதில் ராபா்ட் 5 ஆண்டுகளை அா்ப்பணித்துள்ளதாகவும், இந்திய வரலாறு, கலாசாரம், ஆன்மிகம் மீதான அவரின் ஆா்வம் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் பிரதமா் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி முன்மொழிவின்பேரில், கடந்த 2014 முதல் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினமாக ஐ.நா. சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பெட்டிச் செய்தி...

ஸ்லோவாக்கியா பயணம் நிறைவு

ஸ்லோவாக்கியாவில் தனது பயணத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்த பிரதமா், மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பினாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா், ‘ஸ்லோவாக்கியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆக்கபூா்வமான எனது பயணம் நிறைவடைந்தது. இந்தப் பயணத்தில் எட்டப்பட்ட முடிவுகள், இருதரப்பு உறவை நீண்ட கால அடிப்படையில் வலுப்படுத்தும். வலுவான வா்த்தக உறவுகள், நமது இளைஞா்களுக்குப் பலனளிக்கும். அன்பான உபசரிப்புக்காக ஸ்லோவாக்கியா அரசு மற்றும் மக்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.

இருதரப்பு உறவுகள் விரிவான கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தப்பட்டு, பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் 11 ஒப்பந்தங்களும் கையொப்பமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.