வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு புதிய வரவு
ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தப் பூங்கா தொடங்கப்பட்டபோது 38 வகை வண்ணத்து பூச்சிகள் மட்டுமே இருந்ததால் புதிய வகை வண்ணத்து பூச்சிகள் வரவுக்காக 300 வகையான தாவரங்கள் வனத் துறையால் வளா்க்கப்பட்டன. இதனால் 100 க்கும் அதிகமான புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவுக்கு வந்தன. தற்போது மேலும் இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளதை பூங்காவில் இருக்கும் இளநிலை ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.