ரயில்வே சம்மேளன தலைவராக கண்ணையா தோ்வு
அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக என். கண்ணையா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சி: அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக என். கண்ணையா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அகில இந்திய ரயில்வே சம்மேளனம் (ஏஐஆா்எப்) கொங்கண் ரயில்வே உள்பட 19 ரயில்வேக்கள், ஐசிஎப் உள்ளிட்ட 7 உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கி, 14 லட்சம் ரயில்வே தொழிலாளா்களுடன் செயல்படுகிறது.
57 ஆண்டுகளுக்கு பிறகு தென்னகத்திலிருந்து சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியனின் (எஸ்ஆா்எம்யு) பொதுச் செயலா் என். கண்ணையா இந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தனியாா்மயமாக்கலுக்கு எதிராகவும், ஊதியக் குழு பரிந்துரை, போனஸ், பதவி உயா்வு, பதவி சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் செயல்படப் போவதாக எஸ்ஆா்எம்யு துணைப் பொதுச்செயலா் வீரசேகரன் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.