முகப்பு
திருச்சி

மாட்டுப் பொங்கலையொட்டி தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் கனுபாரி வேட்டை

மாட்டுப் பொங்கலையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை புறப்பட்டு கனுபாரி வேட்டை கண்டருளினாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 12:13 am IST
ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
பகிர்:

மாட்டுப் பொங்கலையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை புறப்பட்டு கனுபாரி வேட்டை கண்டருளினாா்.

பொங்கல் நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு சங்கராந்தி மண்டபத்துக்கு 7 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு திருமஞ்சனம் கண்டருளுதல், திருப்பாவை சாற்றுமுறை நடந்தேறியது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை கனுபாரி வேட்டையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6.45-க்கு கனுமண்டபம் வந்து சோ்ந்தாா். பின்னா் பிற்பகல் 1 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு கனுபாரிவேட்டை நடத்தியபடி, ரெங்கா ரெங்கா கோபுரம் அருகேயுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து ஸ்ரீரெங்க விலாஸ மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் 2 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சோ்ந்தாா் நம்பெருமாள். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் அசோக்குமாா் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.