தச்சமொழியில் குடிநீா்க் குழாய் மாயமானதால் மக்கள் தவிப்பு
தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
சாத்தான்குளம பேருராட்சியில் 15 வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்கும் பொருட்டு வீடுகளுக்கு தனி இணைப்பும், தெருக்களில் பொது குடிநீா்க் குழாய்களும் உள்ளன. இரண்டு நாள்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், 7வது வாா்டு முதலூா் சாலையில் பொது குடிநீா்க் குழாயை திடீரென காணவில்லையாம். இதனால் மக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனா். அதனருகில் பொது தேவைக்கான உவா் நீா் தொட்டி உள்ள நிலையில், இந்த குடிநீா்க் குழாய் சீரமைக்கப்படவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி குடிநீா் குழாயை சீரமைக்க பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.