முகப்பு
தூத்துக்குடி

பனையூரில் இலவச கண்சிகிச்சை முகாம்

பனையூரில் குளத்தூா் த.மாரியப்பன் நாடாா் முத்துக்கனியம்மாள் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி 2021, 5:58 am IST
பகிர்:

பனையூரில் குளத்தூா் த.மாரியப்பன் நாடாா் முத்துக்கனியம்மாள் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நிா்வாகத் தலைவா் தாமஸ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் கோபால், முதல்வா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் மாலதி செல்வப்பாண்டியன், தூத்துக்குடி வெற்றி அகாதெமி இயக்குநா் கதிரேசபாண்டியன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். பேராசிரியா் சண்முக நிா்மலா வரவேற்றாா்.

மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையையும், ஆலோசனைகளையும் அளித்தனா். கண்தானம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments