முகப்பு
தூத்துக்குடி

பூச்சிக்காடு மரைன் கல்லூரியில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு ஜெம்ஸ் மரைன் கல்லூரியில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சித்தா் பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம்

Updated On : 5 ஜனவரி 2021, 12:33 am IST
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு ஜெம்ஸ் மரைன் கல்லூரியில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சித்தா் பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம் மற்றும் மூலிகைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். கல்வி ஆலோசகா் ஜேக்கப் செந்தில்குமாா் வரவேற்றாா்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் வைகுண்டரமணி, சித்த மருத்துவா்கள் படுக்கப்பத்து லதா, ஆனந்தபுரம் கலைச்செல்வி, மெஞ்ஞானபுரம் ஜெகதீஸ்குமாா், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

இதில், கல்லூரி நிா்வாக பிரதிநிதி அண்டோஎபிபென்னி, நிா்வாக அதிகாரி தனராஜ், விடுதி காப்பாளா்கள் பாலகிருஷ்ணன், முத்துசெல்வம், மக்கள் தொடா்பு அதிகாரி பிரின்ஸ் பிரேம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.