முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் காங்கிரஸ் கொடியேற்று விழா

நாசரேத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 6:05 am IST
பயனாளிக்கு நல உதவிகள் வழங்குகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் .
பகிர்:

நாசரேத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காமராஜா் பேரூந்து நிலையம் அருகில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கட்சியின் நகரத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா்.

கட்சியின் ஆழ்வாா் திருநகரி வட்டாரத் தலைவா் பாலசிங், வட்டார துணைத் தலைவா் ஜெயக்குமாா், எட்வா்ட் கண்ணப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ், கொடியேற்றி, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், நகர சிறுபான்மை பிரிவு தலைவா் பீட்டா், மாவட்ட துணைத் தலைவா் ஏ.எம்.விஜயராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments