முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 1:24 am IST
சாத்தான்குளம் அரசூா் இடைச்சிவிளையில் இலவச பட்டா வழங்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.
பகிர்:

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து இடைச்சிவிளை மற்றும் தாமரைமொழி பகுதிகளுக்குச் சென்று இலவச பட்டா வழங்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டாா். பின்னா் பல்வேறு பகுதிகளை பாா்வையிட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று, 3 பேருக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவை வழங்கினாா்.

அப்போது, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமி கணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜ், ஒன்றிய உதவி பொறியாளா் காா்த்திகேயன் உள்பட பலா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments