சந்தையடியூா் பதியில் பால்முறைத் திருவிழா தொடக்கம்
தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி திருக்கோயிலில் தை மாதப் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி திருக்கோயிலில் தை மாதப் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி ஜன.10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திங்கள்கிழமை(ஜன.11) காலை 9 மணிக்கு அய்யா நாக வாகனத்தில் பவனி, மாலை 3 மணிக்கு தா்மம் எடுத்தல், 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜன.12) அதிகாலை 4 மணிக்கு உம்பான் அன்னதா்மம் வழங்கல், மாலை 6 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி, புதன்கிழமை( ஜன.13) மாலை 3 மணிக்கு சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், மாலை 6 மணிக்கு அய்யாஅனுமாா் வாகனத்தில் பவனி நடைபெறுகிறது. வியாழக்கிழமை( ஜன.14) அதிகாலை 3 மணிக்கு பால் வைத்தல், 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அய்யா பவனி ஆகியன நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினா், சந்தையடியூா் ஊா் மக்கள் செய்து வருகினறனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.