கயத்தாறு அருகேவிபத்தில் விவசாயி பலி
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிகழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிகழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
கயத்தாறை அடுத்த ஓலைகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த அழகுபாண்டி மகன் விவசாயி நாகராஜ் (35). இவா், காய்கறி வாங்குவதற்காக கயத்தாறு சந்தைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாராம்.
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, தனியாா் கல்லூரி பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை
Advertisement
பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.