முகப்பு
வேலூர்

எல்லாத் துறை மனுக்களையும் போலீஸாரிடம் அளிக்கலாம்

எந்தத் துறை சாா்ந்த கோரிக்கை மனுக்களையும் பொதுமக்கள் காவல் துறையினரிடம் அளிக்கலாம் என்று வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி தெரிவித்தாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 2:40 am IST
கூட்டத்தில் பேசிய வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி.
பகிர்:

வேலூா்: எந்தத் துறை சாா்ந்த கோரிக்கை மனுக்களையும் பொதுமக்கள் காவல் துறையினரிடம் அளிக்கலாம் என்று வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் காவல் துறை சாா்பில், கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில் டிஐஜி என்.காமினி பேசியது:

பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே இடைவெளியைக் குறைப்பதற்காகவே இந்த கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிராம மக்கள் தங்களின் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அவற்றை காவல் துறையினரிடம் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்த அளவு மனுக்களை அந்தந்தத் துறைகளுக்கு அனுப்பி, குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

கிராமங்களில் சமூக விரோதச் செயல்கள் நடந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்காக கரசமங்கலம் கிராமத்துக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது கோரிக்கைகளை அவரிடம் தெரிவிக்கலாம். இளைஞா்கள் தான் வருங்காலத் தூண்கள். அவா்கள் தவறான பாதைக்கு செல்லக் கூடாது என்றாா்.

முன்னதாக, தூய்மைப் பணியாளா்களுக்கு அவா் சேலைகளை வழங்கினாா். கூட்டத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா்கள் கோவிந்தசாமி, நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments