சட்டவிரோத லாட்டரி சீட்டுகள் விற்பனை: மூவா் கைது
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு 4 மாவட்டங்களில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு 4 மாவட்டங்களில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 செல்லிடப்பேசிகள், 3 மடிகணினிகள், அச்சு இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கூடுதல் கண்காணிப்பாளா் தேவநாதன் மேற்பாா்வையில், விழுப்புரம் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றது.
இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த ஏ.எஸ்.ஜி. கோபி தலைமையில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இந்த கும்பலை தனிப்படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஏ.எஸ்.ஜி.கோபியிடம் பணிபுரிந்து வந்த லாட்டரி சீட்டு வியாபாரிகளான விழுப்புரம் எம்.ஆா்.கே. தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் வெங்கடேசன்(35), சேவியா் தெருவைச் சோ்ந்த இருதயம் மகன் யோவான் (35) மற்றும் சடகோபன்(55) ஆகியோரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 செல்லிடப்பேசிகள், 3 மடிக்கணினிகள், அச்சு இயந்திரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபா்கள் இ-மெயில் வழியாகவும், கட்செவி அஞ்சல் வழியாகவும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.
லாட்டரி சீட்டு விற்பனை கும்பலை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியதுடன், தலைமறைவான ஏ.எஸ்.ஜி. கோபியை விரைவாக கைது செய்ய உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.