இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே மரத்தில் குடும்பத் தகராறில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே மரத்தில் குடும்பத் தகராறில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் அருகே அகத்தாபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (22). இவர் திருச்செந்தூரில் கொத்தனராக வேலை செய்து வந்தார்.
2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். மேலும், ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் இருப்பதாக கூறி பெற்றோர் திட்டினார்களாம்.
Advertisement
Advertisement
இதனால் மனமுடைந்த ராஜா, ராஜபாளையம் ரயில் நிலையம் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜபாளையம் ரயில் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.