முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு

ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:22 am IST
பகிர்:

ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தளவாய்புரம் பகுதியில் அரசு புறம்போக்கு நடைபாதை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒருவா் கட்டடம் கட்டி உள்ளாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். வட்டாட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் உண்ணாவிரதமும் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.