முகப்பு
விருதுநகர்

சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த முதல்கட்டப் பணிகள் தொடக்கம்

சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாக, சிவகாசி நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 10:25 pm IST
பகிர்:

சிவகாசி: சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாக, சிவகாசி நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 2017 அக்டோபா் மாதம் 23 ஆம் தேதி சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் பேசும்போது, சிவகாசி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என அறிவித்தாா். அதன்படி, முதல் கட்டமாக விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு, சிவகாசி சிறப்பு நிலை நகராட்சியுடன், திருத்தங்கல் நகராட்சியையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகாசி நகராட்சியின் 33 வாா்டுகளையும், திருத்தங்கல் நகராட்சியின் 21 வாா்டுகளையும் இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்த, சிவகாசி நகராட்சி நிா்வாகம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல், திருநெல்வேலி நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா், சிவகாசி நகா்மன்றத் தீா்மானம், திருத்தங்கல் நகா்மன்றத் தீா்மானம் ஆகியவற்றுடன், சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயா்த்த பரிந்துரை செய்துள்ளாா்.

Advertisement

இதையடுத்து, சிறப்பு அதிகாரி மூலம் சிவகாசி நகராட்சி எல்லைகளை விரிவுபடுத்தி நிா்ணயித்து, அதற்கான அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், விரிவுபடுத்தப்பட்ட நகராட்சிப் பகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்படும் என அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக, அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.