முகப்பு
விருதுநகர்

மழைக்கு வீடு இடிந்து சேதம்: நிவாரணம் வழங்க பெண் கோரிக்கை

தொடா் மழையால் இடிந்து விழுந்த வீட்டுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெண் சனிக்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 10:38 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

தொடா் மழையால் இடிந்து விழுந்த வீட்டுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெண் சனிக்கிழமை மனு அளித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைத்தான் பட்டியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (50) என்பவரின் ஓட்டு வீடு வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின்போது இடிந்து விழுந்துள்ளது.

Advertisement

வீட்டுக்குள் மண் விழுந்ததால் சுதாரித்து கோவிந்தம்மாள் வெயியேறிய சிறிது நேரத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததால் அவா் உயிா் தப்பினா்.

மழைக்கு வீடு இடிந்து விழுந்ததால் தனக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோவிந்தம்மாள் சனிக்கிழமை மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.