விருதுநகர்

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

Din

சிவகாசியில் உரிய அனுமதியின்றி வேனில் கொண்டு சென்ற பேன்சி ரக பட்டாசுகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து வேன் ஓட்டுநரை கைது செய்தனா்.

சிவகாசி- சாத்தூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற வேனை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, அதில் உரிய அனுமதியின்றி 670 பேன்சிரக பட்டாசுகள் கொண்டு செல்வது தெரியவந்தது. விசாரணையில் வேன் ஓட்டுநா் சாட்சியாபுரம் ஆசாரி குடியிருப்பைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திகை செல்வன் (21) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து காா்த்திகை செல்வனை கைது செய்து, பேன்சிரக பட்டாசுகளையும், வேனையும் பறிமுதல் செய்தனா்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT