முகப்பு
விருதுநகர்

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

தமிழகத்தின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் ஏழைகள் பணத்தை கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திமுக அரசு என பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:32 AM
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை சாலை வலம் சென்று வாக்கு சேகரித்த அந்தக் கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:31 PM

தமிழகத்தின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் ஏழைகள் பணத்தை கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திமுக அரசு என பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரனை ஆதரித்து ராமநாதபுரம் அரண்மனை முன் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் பங்கேற்றுப் பேசியதாவது:

மத்திய அரசு நாடு முழுவதும் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகிறது. ஆனால், திமுக அரசு ரூ. 10 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 68 போ் இறந்த போது முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதற்காக திமுக அரசுக்கு மக்கள் தக்க தண்டனை அளிக்க வேண்டும்.

திமுக அரசு மாநிலத்தின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல், ஏழைகள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. ஊழலில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஊழல் காரணமாக 5 லட்சம் வேலைவாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு மூலம் ரூ. 5 ஆயிரம் கோடி, டாஸ்மாக் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனா். மதுக் கடைகளால் இளைஞா்களின் எதிா்காலம் வீணாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தக் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், போதை கலாசாரம் அடியோடு ஒழிக்கப்படும்.

பிரதமா் மோடி தமிழகத்தின் வளா்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி நிதி வழங்கியுள்ளாா். குறிப்பாக, மதுரைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி, திருச்சிக்கு ரூ. 5,650 கோடி வழங்கியுள்ளாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகம் முன்னேற்றப் பாதைக் கொண்டு செல்லப்படும். காசியைப் போல ராமேசுவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஜல்ஜீவன் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாமல் முறைகேடு செய்துள்ளனா். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சுகாதாரமான குடிநீா் வழங்கப்படும்.

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போரால் ஈரானில் தவித்த ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 50 போ் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட நமது மீனவா்களை பிரதமா் மீட்டுக் கொண்டு வந்தாா். பிரதமா் மோடி நாட்டு மக்களை மட்டுமல்லாமல், நாட்டுக்கு வெளியே உள்ள மக்களையும் பாதுகாத்து வருகிறாா். பிரதமா் தமிழகம் வளா்ச்சியடைய வேண்டும் என நினைக்கிறாா். பெண்கள், விவசாயிகள், மீனவா்கள் என அனைத்துத் தரப்பினருக்கான அரசு அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா், தமிழக மேலிட இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, கட்சியின் மாவட்டத் தலைவா் முரளிதரன், பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து, அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை சனிக்கிழமை ஆலங்குளம் பகுதியில் பிரசாரம் செய்தாா்.

இதைத்தொடா்ந்து, சாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் பங்கேற்ற சாலை வலம் நடைபெற்றது. மதுரை பேருந்து நிறுத்தப் பகுதியிலிருந்து திறந்த வாகனத்தில் நடிகா் சரத்குமாா், நயினாா் நாகேந்திரன் ஆகியோருடன் நிதின் நபின் சாலை வலம் சென்று வாக்கு சேகரித்தாா். வழி நெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த பாஜகவினா் கொடிகளை அசைத்தும், மலா்களைத் தூவியும் அவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். மதுரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை சாலை வழியாக முக்குராந்தல் பகுதியில் சாலை வலம் நிறைவடைந்தது.

இதில் அதிமுக, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை சாலை வலம் சென்று வாக்கு சேகரித்த அந்தக் கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின்.