முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை: தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதி

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:35 AM
ராஜபாளையம் அருகே சேத்தூரில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் (தமமுக) உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:16 PM

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தமமுக) வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா், முகவூா், சுந்தரநாச்சியாா்புரம், கணபதி சுந்தரநாச்சியாா்புரம், ரெங்கநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவா் வாக்குசேகரித்து பேசியதாவது: ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண்பேன். நூல் உற்பத்தி ஆலைகளுக்கான ஜிஎஸ்டியை 0 சதவீதமாகக் குறைப்பேன். ஜவுளிப் பூங்கா அமைக்கப் பாடுபடுவேன் என்றாா்.

Advertisement

அப்போது, ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் என். எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், அதிமுக நகரச் செயலா் (வடக்கு ) வழக்குரைஞா் முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.