போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு சிறை
ராஜபாளையம் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில், தொழிலாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில், தொழிலாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
ராஜபாளையம் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்தவா் குமாா் (39). தொழிலாளியான இவா், கடந்த 2024 ஆண்டு சாலையில் நடந்து சென்ற 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் பேரில் தளவாய்புரம் போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குமாருக்கு ஒராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துகுமரவேல் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.