FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவிகள்.
பகிர்:

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மிதி வண்டி ஊா்வலத்துக்கு முதல்வா் ஆா். சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். சிவகாசி நகா் காவல் நிலைய ஆய்வாளா் லட்சுமி பிரபா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக அவா் சாலையில் செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாணவிகளிடம் விளக்கினாா்.

இந்த ஊா்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி, சிறுகுளம் கண்மாய் சாலை, வேலாயுதம் சாலை வழியே சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. ஊா்வலத்தின் போது, மாணவிகள் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனா்.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments