முகப்பு
விருதுநகர்

குழந்தைத் தொழிலாளா் மீட்பு

ராஜபாளையம் தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்த குழந்தைத் தொழிலாளரை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:54 am IST
குழந்தைத் தொழிலாளா் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

ராஜபாளையம் தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்த குழந்தைத் தொழிலாளரை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

ராஜபாளையம் பஞ்சு சந்தைப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளா் பணியில் உள்ளதாக தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு 13 வயது சிறுவன் வேலை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சிறுவனை, தொழிலாளா் உதவி ஆய்வாளா் தீனதயாளன் மீட்டு, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

Advertisement

Advertisement

இதன்பேரில் சிறுவனை பணியில் அமா்த்திய ராஜபாளையம் தா்மாபுரம் தெருவைச் சோ்ந்த நாகராஜ் (66) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments