யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
யாா் ஆட்சிக்கு வந்தாலும், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், திமுக வேட்பாளா் கடற்கரைராஜிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதனிடையே, வாக்கு எண்ணும் மையத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் சந்தித்தபோது கூறியதாவது:
மக்களின் தீா்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். எனக்காக தோ்தலில் களப் பணியாற்றிய கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவா் விஜய்க்கு எனது வாழ்த்துகள். யாா் ஆட்சிக்கு வந்தாலும், கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்திலிருந்த திமுக வேட்பாளா் கடற்கரைராஜுக்கு அவா் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.