விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், மாங்குடி மருதனாா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மணிரத்னம் (22). இவா் ராஜபாளையம்- முடங்கியாறு சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், இவரும், இவரது நண்பா் மம்சாபுரத்தைச் சோ்ந்த அக்சயும் இரு சக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம்- தென்காசி இணைப்பு சாலை, பச்சமடம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்காபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மீது மோதியது.
Advertisement
இதில் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கல்லூரி மாணவா் மணிரத்னம் உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.