அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு
சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி-ஆலமரத்துப்பட்டி சாலை பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (34). மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், வெள்ளிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டில் மயக்கி கிடந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement